கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றில்

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று (16) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் உட்படலானோர்  அலி சப்ரி ரஹீமை விழா மைதானத்துக்கு அழைத்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

கற்பிட்டியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் மூன்று தடவைகள் நீதிமன்றத்தை தவிர்த்துள்ளார்.

இவ்வாறு நீதிமன்றத்தை தவிர்த்ததன் அடிப்படையில் உடனடியாக அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான அயோனா விமலரத்ன கற்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவோ நீதிமன்றில் ஆஜராகவோ இல்லை.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி