கிளப் சந்தவுக்கு செய்ததைப் போன்று

உனக்கும் செய்யுவோம் என கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக அச்சுறுத்தல் சுவரொட்டிகளை ஒட்டி, கொலை மிரட்டல் விடுத்து,  அலுவலகம் மீது கறுப்பு  ஒயில்  பூசிய  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கெக்கிராவ வைத்திய அதிகாரி அலுவலகம் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், கெக்கிராவ வைத்திய அதிகாரியை கெக்கிராவவை விட்டு வெளியேறுமாறும் இல்லையெனில் கிளப் வசந்தவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
IMG 20240716 141834 800 x 533 pixel
 
சந்தேக நபர்கள் அங்குள்ள 3 கட்டிடங்கள் மீது கறுப்பு ஒயில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
பல கோடி ரூபா பெறுமதியான நச்சு கலந்ததாக கூறப்படும் ரொட்டி மாவை கைப்பற்றியமை தொடர்பில் இருவருக்கு எதிராக கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரியால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 
 
இதனையடுத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி