தலங்கம கலல்கொட பிரதேசத்தில்

உள்ள  முன்னாள் டெஸ்ட் கிரிக்கெற் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூன் 22ஆம் திகதி இரவு இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சந்தேகநபர் ஒரு மடிக்கணினி, 2 டெப், ஐந்து பெறுமதியான கைக் கடிகாரங்கள், நான்கு வளையல்கள், பத்தாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு காதணிகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
 
பின்னர் சந்தேக நபரின் வீட்டிலிருந்து இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
 
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொட்டாவ தலங்கம மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் திருடியமை தொடர்பான வழக்குகளில்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
தலங்கம உத்துவான்கந்தே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி