கிளப் வசந்த கொலையில் சந்தேக

நபர் ஒருவரை விசாரித்த அதிகாரிகளை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என நீதி சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறிய அமைச்சர், தற்போது பொலிஸார் வழக்கை விசாரித்ததால் நீதிபதிகளை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
 
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
சம்பவம் தொடர்பில் குருணாகல் நாடாளுமன்ற  உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
விஜயதாச ராஜபக்க்ஷ மேலும் கூறியதாவது:
 
பொலிஸாரே  வழக்கை விசாரித்தனர். நீதிபதிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒருபெரும் குழப்பம்.
 
இப்படி ஏதாவது நடந்தால், ஒரு நீதிபதிக்கு பொறுப்பு உள்ளது. அந்த நபரைக் கைது செய்வது அவர்  பொலிஸ் அதிகாரியா, இராணுவ அதிகாரியா என்பது முக்கியமில்லை. அதுதான் இந்த நாட்டின் சட்டம். மேலும், இதுபோன்ற அதிகாரிகளை கையாளும் பொறுப்பு பொலிஸ் மா அதிபருக்கும் உள்ளது.
 
இத்தகைய அதிகாரிகளை வைத்து எப்படி குற்ற வழக்குகளை விசாரிப்பது. குற்ற வழக்குகளை இவ்வாறு தீர்க்க முடியுமா? இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது இந்நாட்டு மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இது நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்றார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி