இணைய குற்றங்களில் ஈடுபட்ட

குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் இன்று  (06) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது .

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆபிரிக்கர்கள் ஐக்கிய அரபு எமிரேட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஜூலை முதலாம் கலீஜ் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரை தெரிவிக்கிறது.
 
அதன்படி, அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணைய குற்றங்கள், விபசாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய இலங்கையர்கள் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
 
இந்த குழுவினர் நாட்டுக்கு வந்ததன் பின்னர் மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி