ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த போதே ஜனாதிபதியின் வேண்டுகோளில் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியைச் சென்று சந்தித்துள்ளார் .
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்க் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஹக்கீம் நேரடியாகவே ஜனாதிபதிக்கு அறிவித்தார் .