சமூக ஊடகங்களில் பரவிவரும்

போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் தர்மசக்கரம், இறப்பர் முத்திரை மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தோன்றும் வகையில் ஆங்கிலத்தில் உள்ள கடிதத்தை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
 
இக்கடிதமும் அதன் உள்ளடக்கமும் முற்றிலும் போலியானது எனவும், இலங்கை பொலிஸாரோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறான கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட  நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
குறித்த போலி கடிதத்தின் நகல் பொதுமக்களின் தகவலுக்காக பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது, அது கீழே காட்டப்பட்டுள்ளது.
 
download 1
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி