நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர். சம்பந்தனின் மரணத்தினால்
வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர் இவர். 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தார் .
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் .