கிழக்கு மாகாண ஆளுநர்

செந்தில் தொண்டமான் - கல்முனை மாநகர முன்னாள் மேயர் - ஏ.எம். ரகீப் ஆகியோர் இன்று (30)  சந்தித்துப் பேசினர்.

கல்முனை மாநகர முன்னாள் மேயரின் இல்லத்தில் இடம்பெற்றது.
 
கல்முனை மாநகர சபையில் - ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் மற்றும் கடமையாற்றிய ஊழியர்களின் நிரந்தர நியமனம் வழங்குவது. தொடர்பில் - முன்னாள் மேயர் ரகீபினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட ஆளுநர் செந்தில் - அவர்களுக்கு உடன் நிரந்தர நியமனம் வழங்க இணக்கம் தெரிவித்ததுடன் - உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்தார்.
 
இதேவேளை - உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் - கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர்களாக நாளை திங்கட்கிழமை நியமனம் செய்யப்படவுள்ளனர்.
 
இந்த  நிகழ்வு - நாளை பிற்பகல் 2 மணிக்கு - திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
 
இதற்கான அழைப்பு - சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஊடாக - உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி