கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து

இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் விநியோக (கூரியர்) நிறுவனம் ஒன்றிலிருந்து இன்று (28) கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொதிகளில் 2,030 கிராம் கொக்கேயின் மற்றும் 2,177 கிராம் குஷ் போதைப்பொருள் காணப்பட்டன.
 
இந்தப் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிக்கும் இருவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
 
இதனையடுத்து முகவரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானது என தெரிய வந்துள்ளது.
 
இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி  சுமார்190 மில்லியன் ரூபா என இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப. பிரிவு தெரிவித்துள்ளது.
 
இந்த பொதிகள் கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி