இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்டு 2ம் கட்ட பரிசோதனையிலுள்ள கொவிட் – 19 வைரஸ் தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லீட் நிவ்ஸ் இணையத்தளம் கூறுகிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினால் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பில் கொரோனா வைரசினால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித் துள்ளார்.

2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்படும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வை முற்பகல் 10 மணி முதல் இரவு 08 மணிவரை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (09) தீர்மானித்தது. இதற்கமைய முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் மூன்றாவது வாசிப்பு ஆகியன இடம்பெறும். அதனையடுத்து பிற்பகல் 5 மணி முதல் 8 மணிவரை நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் யோசனை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திடம் எந்தவிதமான உபாய ரீதியிலான திட்டமும் இல்லையென்பது தெரிகிறதென முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட ஊடக சந்திப்பின்போது கூறினார்.

கொரோனா தொற்றி இறந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக நாகொட வைத்தியசாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச ஓட்டுநரொருவர் நேற்று (8) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளான 78 வயதுடைய நபரொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தைத் தாய்வழிப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், தற்போது அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கிறார்.

நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நிபுணர்களுக்கு பதிலாக இராணுவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ள விடயத்தை, யானைக் கால் நோய்க்கு மருந்து கட்டுவதைப்போல் சுகாதாரத் துறை புறந்தள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை "தவறான செய்தி புனைகதை" என ஜனாதிபதி நிராகரித்த நிலையில், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சுற்றுச்சூழல் அழிவுக்கான பொறுப்பை அரச அதிகாரிகள் மீது சுமத்தியுள்ளார்.

பொரளை நகர எல்லைக்குள் நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 90 வீதமானோருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

கோவிட் 19 வைரஸ் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்யும் உரிமையை பாதுகாப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் இருக்கும் நிலையில், இலங்கையில் அந்த உரிமை மறுக்கப்படுவது சம்பந்தமாக எதிர்க்கட்சியின் கவனம் திரும்பியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரணைமடு குளத்து நீரை கொண்டு வருவதில் அரசியல் பிரச்சினை இருக்கின்றதென்றால், அவற்றுக்கு தீர்வுகண்டு, இரணைமடு குடிநீர் திட்டத்தை யாழ்.மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் நிமல் லான்சா உறுதியளித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி