முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டார். பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்களுள் ஒருவராக கெஹெல்பத்தரர பத்மே தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டைச் சமர்ப்பித்த வழக்கு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.