மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின்
சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் வன்முறைகள் குறித்து “நோ அதர் லேண்ட்” எனும் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப் படமானது, மார்ச் மாதம் சிறந்த ஆவணப்படத்துக்கான ஒஸ்கர் விருதை வென்றது.
இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர்களுக்கு, பெருமளவில் தரவுகள் வழங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர், பலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான ஒடேஹ் முஹம்மது ஹதாலின்.
மசாஃபர் யட்டா பகுதியிலுள்ள உம் அல்-கெயிர் எனும் கிராமத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்குதலின் போது, ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பலஸ்தீன அதிகாரத்தின் அமைச்சரகம் உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் பொலிஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஒரு இஸ்ரேலியர் மற்றும் 4 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழன்