காலி, கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச் சூடு
நடத்தியிருந்தனா்.

அந்த முச்சக்கரவண்டியின் சாரதி இன்று (24) காலை பியதிகம பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு அருகில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தலையை வைத்து அவா் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் சுமார் 31 வயதுடையவர் எனவும் ஹபுகல, வக்வெல்ல பிரதேசத்தை சோ்ந்தவா் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.

கடந்த 22ஆம் திகதி காலி கராபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் அதிலிருந்து தப்பிச் சென்றிருந்தனா்.

அதன்போது தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியே இன்று (24) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி