அம்பலாங்கொடை தர்மசோகா பாடசாலையின் பிரதி அதிபரை கொலை செய்ய முயற்சித்து, மினுவாங்கொடை பிரதேசத்தில்
கொலைகளை செய்த பிரதான துப்பாக்கிதாாி என சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உதவிய பெண்ணொருவரும் ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நேற்று (20) குளியாப்பிட்டிய மற்றும் கட்டான பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரி என கருதப்படும் நபா், டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வா்த்தகரான மாணிக்குகே நுரேஷ் சுபுன் தயாரத்ன என்ற ஹினாத்யான மஹேஷினுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.

கொலை முயற்சி, கொலைக்கு உதவி செய்தல், துப்பாக்கி வைத்திருந்தமை, ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அவாிடம் இருந்து கைத்துப்பாக்கி, மெகசின், தோட்டாக்கள், 15.720 கிராம் ஹெரோயின், 60,000 ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், கட்டான பொலிஸ் பிாிவில் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபருக்கு உதவியதாக 72 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி