தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.


பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை 3 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

இதன் அடிப்படையில் அந்த சேவைக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதி முடிவடையும், அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தொடர்பில் இறுதி முடிவு இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதால், அவர் நாடு திரும்பிய பின்னர் பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கான ஜனாதிபதியின் சிபாரிசு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி