கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றிரவு காயமடைந்த நபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் நின்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர், காயமடைந்த நபரின் மனைவியையும் துப்பாக்கியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய ரைபல் ரக துப்பாக்கி. சந்தேகநபர்கள் குறித்த இடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 56, 20 மற்றும் 25 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி