இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது இன்று (04) நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களின் மீதான பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் இறுதிப்படுத்தல் மற்றும் வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையினைப் பிரதிபலிக்கின்ற உயர்வடைந்த சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய நகர்வு என்பவற்றினைத் தொடர்ந்து சந்தை மனோபாவங்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பணவீக்க வீழச்சிப்பாதைச் செய்முறையின் தொடர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாவிருப்பதனை நிச்சயப்படுத்தும் பொருட்டு தற்போதுள்ள இறுக்கமான நாணயக் கொள்கை நிலையின் பேணுகை அத்தியாவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்
