யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால், கோயிலின்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் கோயில் சூழலில் அதிகளவில் மோப்ப நாய்கள் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, ஒரு விசமியினால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.