கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.

இந்தியா வழங்கவுள்ள ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான உடன்படிக்கையில் புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் , இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டன.

இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

நாடுஎதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில், இவ்வாறு இந்தியா இந்தளவு பாரிய உதவியை வழங்கி இருப்பது வரலாற்றில் முதல்தடவையாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

என்றாலும் இந்தியாவின் உதவி தொடர்பில் பல்வேறு கதைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் வெளிவிவகார அமைச்சர் அல்லது நிதி அமைச்சர் இந்த உதவி கிடைத்ததன் பின்னணி தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை கோரியுள்ளார்.

இதனிடையே நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் மொட்டு கட்சி ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்கி தேர்தல் ஒன்றுக்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது வெட்கப்படவேண்டிய செயல் எனவும் தெரிவித்தார்.

அதனால் இந்திய அரசாங்கம் வழங்கி இருக்கும் கடன் தொகை மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துவேலைத்திட்டங்களின் அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பிரேரணை முன்வைத்துள்ள அவர், இந்தியாவின் கடன் தொகையின் மூலம் பட்டினியுடனும் தாகத்துடனும் வரிசையில் இருக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய அரசு சீனாவுடன் பல தொடர்புகளை போணி வந்த நிலையில் இந்தியாவுக்கு அது தலைவலியை ஏற்படுத்தியிருந்தது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை பயன்படுத்தி கொண்டு இந்தியா தமக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்பதாகவே தற்போதைய காய் நகர்த்தல்கள் பார்க்கப்படுகின்றன. வேறு வழியின்றி தவிக்கும் ராஜபக்ஷ அரசு விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவிடம் தஞ்ஞம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவின் உதவிகள் இல்லாவிட்டால் நாட்டு மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருக்கலாம். நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது இந்தியாவினால் வழங்கப்படும் இந்த உதவிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதுபோல் நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி