மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் பின்னர் நேற்று (30) நாள் பூராவும் கைதிகளுக்கு உணவு வழங்கப்படவில்லையென செய்திகள் கூறுகின்றன. 

நம்பகரமான தகவல்களின்படி, சிறைச்சாலைக்குள் நடந்த சேதங்கள் காரணமாக கைதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான இயந்திரம் செயற்படவில்லை. பசியினால் உணவு கேட்டு கூக்குரலிடும் கைதிகளின் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் விசேட நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பின்னணியில் மஹர சிறைச்சாலைக்குள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு முன்பு பல சிறைகளில் தடுப்பு கைதிகள் மேற்கொண்ட எதிர்ப்புகள் மிருகத்தனமாக அடக்கப்பட்டதாகவும், சில சம்பவங்கள் தொடர்பில் போதுமாக விசாரணைகள் நடைபெறாமையால் அவை மனிதப் படுகொலைகளாகக் கருதப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி