கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமானளவல் குறைந்துள்ளதாக,
குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார்.
இந்த நிலைமை, இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
"கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2013ஆம் ஆண்டில் 350,000 பிறப்புகள் இருந்தன. 2024ஆம் ஆண்டில் இது 228,000க்கும் குறைவாக இருந்தது. அந்தக் குழந்தைகளில் சிலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர்.
“நோய்கள் காரணமாக. 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்க்காத ஒரு சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. குழந்தைப் பருவ நீரிழிவு நோய் பற்றிய அறிக்கைகள் அதிகரித்துள்ளன. குழந்தைப் பருவப் புற்றுநோய் பற்றிய அறிக்கைகள் அதிகரித்துள்ளன. மனநோய் அதிகரிப்பதையும் நாம் காண்கிறோம். இது போன்று குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் நன்றாக இருக்காது.
"நாம் அனைவரும் இதைப் பற்றி கவனமாக இல்லாவிட்டால், நாம் அனைவரும் கடினமான சூழ்நிலையில் இருக்கவேண்டி ஏற்படும்" என்று, குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா மேலும் கூறினார்.