வங்காள விரிகுடாவில் குறைந்த

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் எனவும் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது இவ்வாறிருக்க, நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கீழே பெயரிடப்பட்டுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள்
 
1. மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை
 
2. கலா ஓயா ஆற்றுப்படுகை
 
3. கனகராயன் ஆற்றுப்படுகை
 
4. பரங்கி ஆறு ஆற்றுப்படுகை
 
5. மா ஓயா ஆற்றுப்படுகை
 
6. யான் ஓயா ஆற்றுப்படுகை
 
7. மகாவலி ஆற்றுப்படுகை
 
8. மதுரு ஓயா ஆற்றுப்படுகை
 
9. முந்தெனியாறு ஆற்றுப்படுகை
 
10. கலோயா ஆற்றுப்படுகை
 
11, ஹெடோயா ஆற்றுப்படுகை
 
12. வில ஓயா ஆற்றுப்படுகை
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி