அக்குறணையில் முஸ்லிம்களுடன்

இடம்பெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இடம்பெறாதமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜித ஹேரத் காரசாரமாக கலந்துரையாடியுள்ளார்.

எவ்வாறாயினும், தமது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் முஸ்லிம், மற்றும் முஸ்லிம் ஆளுநர் மற்றும் ஏனைய முஸ்லிம்களின் பதவிகள் பற்றி இந்த விடயத்தை முன்வைப்பவர்கள் பேசுவதில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அரசாங்கம் இனக்குழுக்களாகப் பிரிந்து மக்களை ஆட்சி செய்வதில்லை எனவும் சில அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களை ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு நடந்த உரையாடல் வருமாறு. 

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர்:- நாங்கள் சாதிய வேறுபாடுகளின் அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றைக் கேட்கவில்லை,

அமைச்சர் விஜித ஹேரத் – 
“அதைக் கேட்காதீர்கள். அது தவறு.

முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் :- எமது மதத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதனைப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா சார்?

அமைச்சர் விஜித ஹேரத் - 
"இல்லை அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்சரவை அமைச்சராக இருந்தேன். அப்போது முஸ்லிம் பெண்களின் ஹிஜாபுக்கு துணி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பத்திரம் போட்ட நான் முஸ்லிம் அமைச்சர் அல்ல சிங்களவன். "

மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் ஒரு முஸ்லிம் எம்.பி இல்லை என்று நினைத்தே ஆதம்பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். எனவே இதைப் பற்றி யோசிப்பதுதான் ஒரே வழி.

மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். அமைச்சர் இல்லை என்று தொங்கவிடாதீர்கள். நாங்கள் அவர்களை சரியான இடங்களில் நியமித்துள்ளோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி