முன்னாள் தேர்தல் ஆணையாளர்

மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடை இல்லத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் ரூ. 300,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
சம்பவம் தொடர்பில் தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 
 
இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டன.
 
தற்போது கொழும்பில் வசிக்கும் தம்பதியினர் வார இறுதி நாட்களில் அம்பலாங்கொடை வீட்டுக்குச் செல்வது வழக்கம். இன்று (23) மாலை வீட்டுக்குச் சென்றபோது  வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதனைக் கண்டுள்ளனர்.
 
முறைப்பாட்டின் பேரில் அம்பலாங்கொடை பொலிஸார. குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை நடத்துகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி