லியனகே டான் பிரியசாத்
எனப்படும் டான் பிரசாத் மீதான வழக்கு நேற்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
2014 ஆம் ஆண்டு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் முஸ்லிம்களை சமூகத்தை வன்முறை மூலம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 291A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட டான் பிரசாத்துக்கு எதிராக குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இந்த வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது தொடர்பான விசாரணை அடுத்த வருடம் மார்ச் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முறைப்பாட்டாளர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ஆஜரானார்.