குவைத்தில் பணிபுரியும்

தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் கைரேகையை பதியுமாறு அந்நாட்டின உள்துறை அமைச்சகம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.

கைரேகைகளை  பதிவதற்கான கடைசி திகதி டிசம்பர் 31 என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதன்படி, குவைதில் சேர்ந்த     "Sahel" மென்பொருளைப் பயன்படுத்தியோ அல்லது "Matta" எனப்படும் மின்னணு முறை மூலமாகவோ கைரேகையை பதிவு பதிவு செய்யலாம். 
 
மேலும், ஒன்லைன் முறையில் கைரேகைகள் பதிய அருகாமையில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மத், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு இயக்குனரக அலுவலகங்களில் இது வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
இது தவிர, அலி சபா அல் சலீம், உம் அல்-ஹைமன் மற்றும் ஜஹ்ரா பகுதிகளில் அமைந்துள்ள நபர்களின் புலனாய்வுத் துறையிலும் கைரேகையை மேற்கொள்ளலாம்.
 
கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடும் என "தி டைம்ஸ் குவைத்" நாளிதழில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி