சட்டவிரோதமான முறையில்
கார் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதிவான் நீதிமன்றில் இன்று (22) ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.