கடந்த அரசாங்கத்தின் நான்கு

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (21) குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பில் வாக்குமூலம்  பெற்றுக் கொள்வதற்காகவே இவர்கள் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ரொஷான் ரணசிங்க, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகிய நான்கு முன்னாள் அமைச்சர்களே இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி