எதிர்கட்சியில் இருந்து பலமாக
இருந்தவர்களை உடைத்து ஒரு வாக்கைப் பெறுவது என்பது கடின உழைப்பின் மூலமே சாத்தியமாகும் அதனை நாங்கள் செய்து காட்டியு எங்களது கட்சிக்கு ஒரு ஆசனத்தைப்பெற்றுள்ளோம்
அரசாங்கம் பெற்றுள்ள இமாலைய வெற்றிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த வெற்றியின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுகள் ஒரே தேர்தலில் நடைபெறும் முறையில் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும்
கல்வி, தொழில், இடப்பங்கீடு, சம உரிமை, நிருவாக சமச்சீர் விடயங்களில் புரட்சி ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கியுள்ளனர் இதனை அரசு சாதித்துக் காட்ட வேண்டும் என்று தனது தேர்தல் பணிக்காக பணி செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எஸ். எம் சபீஸ் தெரிவித்தார்.