மக்களின் அனைத்து
எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாக வர்த்தக, வாணிபம் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களைப் பிழிந்தெடுக்கும் மாபியாக்களின் செயற்பாடுகள் இனியும் இடம்பெறா.
எதிர்காலத்தில் மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடு இன்றி பொருட்களையும் வாங்கக்கூடிய சந்தை உருவாகும் என்கிறார்.
நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் மீண்டும் கொண்டு வருவதற்காக அரசாங்கம் செயற்படும்.
புதிய அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.