புதிய கடவுச்சீட்டுகள் எதிர்வரும்

திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
“இ-பாஸ்போர்ட் இறக்குமதிக்கு டெண்டர் கோரப்பட்டு  அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 
 
இருப்பினும், குறித்த காலத்தில் அதனை எமக்கு வழங்குவதில் அந்த நிறுவனத்துக்கு கடினமாக இருந்தது. அதே நேரத்தில், சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான  அனுமதியை அதே நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
 
இதன் காரணமாக கடவுச்சீட்டு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். எதிர்வரும் சனிக்கிழமைக்குள் இலங்கைக்கு கடவுச்சீட்டுகள் கிடைக்கும். திங்கட்கிழமை முதல் புதிய கடவுச் சீட்டு வழங்கப்படும் என்றார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி