கம்பஹா தம்மிட்ட பிரதேசத்திலும்

ஜா- எல மகேவிட்ட பிரதேசத்திலும் இன்றிரவு (06)  இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 
 
குறித்த நபர் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
காயமடைந்தவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
இந்நிலையில் ஜா- எல மகேவிட்ட பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
மார்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி