இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க

விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​பிரபல தொலைக்காட்சி சேவை ஒன்றில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருவரின மனைவி என கூறப்படுபவர்  நேற்றுக் (05) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி  சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே  கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக்கப்படவுள்ளார்.
 
குருணாகல் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இந்த பெண் வைத்தியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நேற்றுக்  (05) காலை 8.50 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
 
தற்போது குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி