எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்

போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கட்டுப் பணத்தை இன்று (5) காலை வைப்பிலிட்டுள்ளார்

சிறிபால அமரசிங்க ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.  

சிறிபால அமரசிங்க இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய 15ஆவது நபர் என்பதுடன் ஆறாவது சுயேச்சை வேட்பாளரும் ஆவார்.

நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிறிபால அமரசிங்க தற்போது பணியாற்றி வருகிறார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாக 'டம்மி' வேட்பாளர்கள் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவும் இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி