நாமல் ராஜபக்க்ஷ மற்றும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் தனி வேட்பாளரை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் சபை தீர்மானித்துள்ள நிலையில், ஆளும் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்க நாமல் ஆதரவு எம்பிக்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான ராஜபக்க்ஷவின் அமைச்சர்கள் பலர் இந்த வாரம் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அதே வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
இதுவரை அரசின் பணிகளை ஆதரித்து வந்த ராஜபக்க்ஷ ஆதரவாளர்கள் தற்போது தனி வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சி வேடத்தில் நடிக்கும் குழுவாக மாறியுள்ளனர்.
 
அரசாங்கம் பெரும்பான்மையை இழக்குமா?
 
கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்கள், குழப்பங்கள் காரணமாக இந்த வார நாடாளுமன்ற கூட்டங்களும் மிகவும் சூடுபிடிக்கும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளின் போது சில மாற்றங்கள் இடம்பெறும் என அறியமுடிகிறது.
 
நாளை 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடுகிறது.
 
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இந்த வாரம் தொடர்பான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி