மொனராகலை, நாமஓயா

மற்றும் இங்கினியால பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) அதிகாலை 2.45 மணிளவில் அம்பாறை நாமல் ஓயாவில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கராடுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸா தெரிவித்தனர்.
 
மேலும், இங்கினியாலை நெல்லியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 54 வயதுடைய பெண்ணும் அவரது 17 வயது மகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, கராடுகல பொலிஸ் நிலையத்துக்குள் 42 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
 
இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் மற்றும் மகள் ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி