ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர

ஆகியோரை நீக்குவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், கடந்த சனிக்கிழமை (30) நீக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம், கட்சித் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்றதுடன், இக்கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்கவுக்கு பதிலாக, மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி.குணவர்தன நியமிக்கப்பட்டார்.

மேலும், பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவன்னவுக்கு பதிலாக, மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளதோடு, மஹிந்த அமரவீரவுக்கு பதிலாக, கட்சியின் மூத்த துணைத் தலைவர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி