இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்ற

உறுப்பினர் திரு.சனத் நிஷாந்த சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த சபாநாயகரிடம் பல காரணங்களை முன்வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எதிர்க்கட்சித் தலைவரால், நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் அடங்கிய நாடாளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான செயற்குழுவின் தீரை்மானங்களுக்கு முரணாக, 27(2)இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்க உள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

“எதிர்க்கட்சித் தலைவரால், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

“எதிர்க்கட்சித் தலைவரின் உரை ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால், அவரது அலைபேசி ஊடாக ஆளுங்கட்சி எம்.பிக்கள் வீடியோ செய்யப்படுகின்றனர்.

“நான் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்களின் அனுமதியின்றி, நளின் பண்டார எம்.பி இவ்வாறு வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதே, நீங்கள் இந்நடவடிக்கை நிறுத்துமாறு உத்தரவிட்டீர்கள்” என்று, சனத் நிஷாந்த எம்.பி மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி