2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள்

திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

"இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

30.06.2023 ஆம் திகதி அன்றைய நிலவரப்படி 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வர்த்தமானி அறிவித்தலின்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு 2023 டிசம்பர் மாதம் பரீட்சையை நடத்தவுள்ளது. முதல் வாரத்தில் பரீட்சை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்'' எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி