இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக மில்லனிய

பொலிஸார் தெரிவித்தனர்.

மில்லனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாபே பாலத்திற்கு அருகில் நேற்று (09) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹல்தோட்டை யலாகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொலமெதிரிய பகுதியில் இருந்து மில்லனிய நோக்கி பயணித்த போது, ​​பனாபே பாலத்திற்கு அருகில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் உயிரிழந்தவரின் மனைவி ஆகியோர் படுகாயமடைந்து பண்டாரகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் கணவர் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மில்லனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி