ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவத்தை தேவாலயத்திற்கு அருகில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது

செய்யப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (28) கைது செய்துள்ளனர்.

சேதபொல, மாமிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி நுரைச்சோலை, சேதபொல களப்பிற்கு அருகில்  நெற்றியிலும் இடது கையிலும் வெட்டுக்காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (29) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி