ஒழுக்கக்கேடான செயற்பாடுகளில் ஈடுபடும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சங்காதிகரன சட்டமூலத்தை உடனடியாக

அமுல்படுத்த வேண்டும் எனவும், புத்த ஆணைக்கு எதிராக செயற்படும் குழுக்களுக்கு எதிராக இவ்வாறான வழக்குகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஓரிரு பௌத்த துறவிகள் செய்யும் கீழ்த்தரமான செயல்களை பெரிதுபடுத்தி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பௌத்த வாதத்தை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் சில அமைப்புகள் முன்னிற்கின்றன. இந்நடவடிக்கைகளுக்காக அவ்வமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைப்பதாக, அமர புற மகானிக்காயின் பதிவாளர் அக்கரல மஞ்சுளதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

தவறிழைக்கும் எந்த ஒரு பௌத்த துறவியையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த அந்த தேரர், குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான தேரர்கள் அங்கம் வகிக்கும் நிக்காயாக்களின் முதன்மை தேரர் இவ்விடயம் தொடர்பில் ஒழுக்க விசாரணை நடத்துவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது தவிர, பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் பிரகாரம் குற்றத்துக்கு ஏற்ற தண்டனை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்ட தேரர், தனிப்பட்ட நபரின் குற்றத்திற்காக அன்றி ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கு இழிவை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி