காணாமல் போன குழந்தையின் சடலம் காலி நெலுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (15) பிற்பகல் முதல் குழந்தை காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து குழந்தையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி இன்று (16) காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

2 வயது 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி