ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த அங்கொட லொக்காவின் உதவியாள ´அத்துரிகிரி ஜெரம்´ பொலிஸ் விசேட

அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அத்துரிகிரிய மிலேனியம் சிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தேடப்படும் சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனவும், சந்தேக நபர் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அதுரிகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி