மொரட்டுவை – கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு,

அந்தக் கைகளுடன் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது கைகளைத் துண்டித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் மொரட்டுவை காவல்துறையினருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் துண்டிக்கப்பட்ட கை பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எடுத்துசெல்லப்பட்ட கை பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி