உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து, இன்றைய தினம் (03) அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தவாறு, மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று தேர்தலை நடத்தப்போவதில்லை என்று, கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அத்துடன், அவ்வப்போதான நிலைமை தொடர்பிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அறிவித்து வந்தனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பிலான இறுதியான முடிவொன்று எட்டப்பட்டதன் பின்னரே, தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை அறிவிக்க முடியுமென்றே தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், இந்நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளனர் என்றும் அதன் பின்னர் தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி