தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று, இன்று இடம்பெறவுள்ளது.

அதாவது மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் நடைபெறும் நாளில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை மே 11ஆம் திகதி வரை நடத்த முடியாதா என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி தேர்தல் சட்டரீதியாக நடைபெறுமா என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை, பணம் இருந்தாலும் தேர்தலே கிடையாது என ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவே பல தடவைகள் அறிவித்திருந்தது. அப்படியானால், அத்தகைய தீர்மானம் சட்டரீதியாக அறிவிக்கப்பட்டதா என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் வினவப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தேர்தலை நடத்துவது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி