அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக

இருக்கின்றார் எனவும், அதிலுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தனித்தனியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டு குழப்ப வேண்டாம் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உறுதியளித்தமை தொடர்பில் ஊடகங்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, "அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியாகவுள்ளது. எனவே, 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் தனித்தனியே முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டுக் குழப்ப வேண்டாம்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி