அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது.அசர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடான அர்மீனியா இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது.

அந்த போரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷியாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது.

போர் முடிவுக்கு வந்த போதும் அசர்பைஜான் - அர்மீனியா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இருநாட்டு பாதுகாப்பு படையினரும் எல்லையில் எதிர்தரப்பினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் இருநாட்டு வீரர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், நாக்ரோனா-கராபாக் பகுதியில் உள்ள எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே நேற்று திடீரென மோதல் வெடித்தது. அர்மீனிய மற்றும் அசர்பைஜான் ராணுவத்தினர் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இருநாட்டு வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், 7 பேர் அசர்பைஜான் வீரர்கள் எனவும், ஒருவர் அர்மீனிய வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோதலின் போது தங்கள் நாட்டு வீரர்கள் 24 பேர் காணவில்லை எனவும், 13 அசர்பைஜான் வீரர்களை பிடித்துவைத்துள்ளோம் எனவும் அர்மீனியா தெரிவித்துள்ளது.

அசர்பைஜான் - அர்மீனியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில் இந்த மோதல் இருநாடுகளுக்கு இடையே போரை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.    


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி